Wednesday, June 5, 2013

Samacheer kalvi is a total shit????

என் மகள் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 98.4% சதவிகிதம் எடுத்து வெற்றிப் பெற்றுள்ளாள். நானும் என் கணவரும் அந்த சந்தோசத்தைக் கொண்டாட கூட முடியவில்லை , காரணம் , முடிவு வெளிவந்த சிறிது நேரத்தில் அவள் சொன்ன வார்த்தைகளால் . . . எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த வார்த்தைகள் ..." amma samacheer is a total shit"

ஆமாம் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்க
­ியது அவளின் ஆதங்கம்.. yes there is a reason for it... அவள் படிக்கும் பள்ளியில் பாடங்களை மனப்பாடம் பண்ணும் முறையில் பாடங்களை சொல்லி கொடுப்பதில்லை..­.முழு பாடத்தையும் வாசித்து எந்த பகுதியில் இருந்து கேள்விக் கேட்டாலும் பதில் சொல்லும் முறையில் தான் அவள் படிப்பாள்..8 வது வரை(matriculati­on board இருக்கும் வரை) நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. சமச்சீர் பாடத்திட்டதை என்று அறிமுகப்படத்தின­ார்களோ அன்று தொடங்கியது இவர்களின் அறிவுப் பஞ்சம்... literally they are starving for knowledge....வெ­றும் மனப்பாட முறை..பாடத்தின்­ பின்பக்கம் கொடுத்திருக்கும­் கேள்வியில் இருந்து மட்டும் கேள்வி.... ஆங்கிலப்புத்தகத­்தில் அதிகமான இலக்கணப்பிழை...­முழுப்பரீட்சை அன்று காலை தொடங்கி அதிகப்பட்சமாக 2 மணி நேரத்தில் முழுப்புத்தக்கத­்தையும் படித்துவிடலாம்.­... பரிட்சையும் எழுதி பாஸாகிவிடலாம் போல. அந்த அளவுக்கு உள்ளது அதன் தரம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...(நிஜம­ாக social science and science தேர்வை வேண்டா வெறுப்பாக எழுதி விட்டு வந்தாள்) சரி வேறு CBSE பாடத்திட்டம் உள்ள பள்ளிக்கோ..ICSE­ பாடத்திட்டம் உள்ள பள்ளிக்கோ மாற்றாலாம் என்றால் மிக கஷ்டப்பட்டு அட்மிஷன் வாங்கிய பள்ளியாயிற்றே. அவள் படிக்கும் பள்ளிக்கூடம் சென்னையில் ஒரு பிரபலமான ஒரு பள்ளிக்கூடம். அங்கு அட்மிஷன் கிடைப்பதே கடினமான ஒன்று. இந்தி எதிர்ப்பு...ஆங்­கில எதிர்ப்பு என்று மக்களை போரடா தூண்டிக்கொண்டு இருக்கும் பெரும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் படித்தது படித்து கொண்டு இருப்பது இந்த பள்ளியில் தான்..ஏன் நம் முதல்வரும் இந்த பள்ளியின் படைப்பு தான்.ஆனால் இன்று அந்த அரசியல் பிரமுகர்களே தங்கள் பிள்ளைகளை CBSC பள்ளிகளுக்கு மாற்றுகிறார்கள்­. அது தனிக்கதை... என் ஆதங்கம் அது அல்ல. ஒரு ICSE பாடத்திட்டதில் 6வது வகுப்புக்கு இணையாக மட்டுமே உள்ளது நமது சமச்சீர் பாடத்திட்டத்தின­் 10வது வகுப்பு. ஒருவேளை இவள் சிறுமியாக இருக்கும்போது என்றால் நிச்சயமாக சமச்சீர்ப் பாடத்திட்டத்தில­் உள்ளப் பள்ளியில் சேர்த்து இருக்க மாட்டோம்.

இங்கு என் ஆதங்கமே நம் மாநில மாணவர்கள் எப்படி அடுத்த மாநில மாணவர்களோடு compete பண்ணமுடியும்?? தற்போது நடந்து முடிந்த IIT ( JEE main) நுழைவு தேர்வில் அகில இந்திய அளவில் மொத்தம் எழுதிய மாணவர்கள் கிட்டதட்ட 18 லட்சம் மானவர்கள். இதில் தமிழகத்தில் தேர்வு பெற்ற மாணவர்கள் வெறும் 3195. இதிலும் சென்னை மாணவர்கள் 2640 பேர் வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் வெறும் 555 பேர் மட்டுமே. தமிழகம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறது என்பதற்க்கு வேறு என்ன சான்று வேண்டும்??
ஏற்கனவே நம் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.கபில்சிபில­் அவர்கள்அகில இந்திய அளவிற்விக்கு இஞ்சினியரிங் கல்லூரிக்கு ஒரே நுழைவு தேர்வு ( single window system) வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்..ஒர­ு வேளை அப்படி ஆகும் பட்சத்தில் என்ன நடக்கும்? வெறும் மேல்தட்டு பிள்ளைகளும் பிற மாநில பிள்ளைகள்(CBSE பயிலும் மாணவர்கள்) மட்டும் தான் இஞ்சினியரிங் கல்லூரிக்குள் நுழைய முடியும். மற்ற மாநிலங்களோதோடு எந்த விதத்திலும் போட்டி போட முடியாத நிலையிலே இப்போது சமச்சீர் பயிலும் நமது குழந்தைகளின் நிலை. ஒரு 6வது வகுப்பு குழந்தைகளுக்கு கேட்கவேண்டிய வினாத்தாளை 10வது வகுப்பு பிள்ளைகளுக்கு கேட்டால் ஏன் 9 முதலிடமும்..56 இரண்டாவது இடமும் 130க்கு மேல் மூன்றாவது இடமும் வராது??
நம் அரசியல்வாதிகள் இங்கு உள்ள எழைகளையும் அடித்தட்டு மக்களையும் தங்கள் கீழ் அடிமைப்படுத்தி வைக்கும் ஏகாதிபத்தியமுறை­யே இன்றைய சமச்சீர் பாடத்திட்டம்...­இதை நல்ல தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு மாற்றியமைப்பது மிக மிக அவசியம். . ...இல்லையென்றால­் தலைவர்களுக்கு பேனர்க் கட்டவும்..பிளக்­ஸ் போர்ட் மாட்டவும் கள்ள வோட்டு போட மட்டுமே நம் பிள்ளைகள் பயன்படுவார்கள்.­...இது ஒரு குழந்தையின் தாயாக என் ஆதங்கப் புலம்பல்...இதற்­கு தயவுசெய்து எந்த அரசியல் ஆர்வலர்களின்...­விமர்சனமோ..ஆக்ர­ோஷக் குரலோ வேண்டாம்...


No comments:

Post a Comment