Friday, July 9, 2010

தமிழா அன்னை தமிழ் படும் பாட்டை நீயும் தெரிந்துகொள்!

அன்பு தமிழா!

இந்த கவிதை மாமேதை வாலி (தி. மு. க. கலைஞர் எடுபிடி ) தமிழ் செம்மொழி மாநாட்டில்
பாடிய கவிதை!

விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,
மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !
எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!
தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !
கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட
அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,
பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,
அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்
செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !
காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !
செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்‌னொரு ஆஸ்கார் !
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !
சமீபத்தில் பூ ஒன்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது,
ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

இத்துடன் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்த மாநாட்டின் என்தோ ஒரு
நாளிலும் அழைக்கப்படவில்லை என்பதையும், மாநாட்டில் பல ஆயிரம் மக்களுக்கு
சரியான உணவு, போக்குவரத்து வசதிகள் கிடைக்க வில்லை என்பதையும்,
முக்கிய பிரமுகர்கள் (முன்வரிசையில் அரசியல் வாதிகள் ) வரிசைக்கு மட்டும் மின்விசிறி
போடப்பட்டு இருந்ததையும் நினைத்து பெருமைகொள் தமிழா!

இனி தமிழ் வளர்ந்து விடும். M . A . தமிழ் படி, வேலை நிச்சயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment