Saturday, October 12, 2013

இது நமக்குத் தேவையா?

காற்று வாங்கப்போய் காதல் வாங்கி வருவதில் தவறில்லை. ஆனால் ஊசி வாங்கப் போய் ஊரையே வாங்கி வருவது அவசியமா? இன்று இதுதான் நடக்கிறது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வீட்டைப் பூட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் கிளம்பி விடுகிறார்கள். கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கிறார்கள். காதில் கேட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு வருகிறார்கள். அதுவும் தீராமல் அடுத்த வாரத்துக்கும் சிலவற்றைத் திட்டமிட்டே திரும்புகிறார்கள். மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த நுகர்வு கலாச்சாரம் எப்படி வந்தது?
அடுத்தவருக்காக வாழ்வதும் அடுத்தவரைப் பார்த்து வாழ்வதும்தான் முதலிரண்டு காரணங்களாக நிற்கின்றன. இது இல்லை என்றால் அவர்கள் என்ன சொல்வார்கள்? அதை வாங்கவில்லை என்றால் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்புக்குத் தீனிபோடவே பலர் பல பொருட்களை வாங்குகிறார்கள். கொட்டாவி போலத்தான் ஷாப்பிங் செய்வதும். ஒருவர் நகவெட்டி வாங்கினாலும், அந்தத் தெருவில் இருக்கிற அனைவரும் அதையே வெவ்வேறு வடிவங்களிலும் தரங்களிலும் வாங்கிவிடுவார்கள்.
அடுத்ததாக மக்களிடம் பொங்கிப் பிரவாகிக்கும் அழகுணர்ச்சி. இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் எவ்வளவு அழகு என்று சிலாகித்தே பல பொருள்களை வீட்டில் சேர்த்திருப்பார்கள். சுவரில் மாட்டுகிற ரோஜாக்கள் சிரிக்கிற அட்டையில் துவங்கி, தரையில் ஒட்டுகிற ஸ்டிக்கர் கோலம் வரை இவர்களின் அழகுத் தேடல் நீண்டுகொண்டே செல்லும். சில மாதங்கள் கழித்து இவற்றில் பல குப்பைத் தொட்டிகளில் பரிதாபமாய் முழிக்கும். குப்பையும் செல்வமாகும் என்பதை மாற்றிச் செல்வமும் குப்பையாகும் என்பதை நிரூபிக்கும் வித்தகர்கள் இவர்கள்.
மக்களை மாபெரும் நுகர்வோர்களாக மாற்றியதில் ஊடகங்களின் பங்கு இல்லாமலா? அவை காட்சிப்படுத்துகிற கவர்ச்சி விளம்பரங்களை நம்பித்தான் இன்று பல முதலாளிகள் பெரும் முதலாளிகளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரபல நடிகர் பரிந்துரைக்கிற காபியைக் குடித்தால்தான் நம் தந்தையின் மனதையோ, மனைவியின் அன்பையோ புரிந்துகொள்ள முடிகிறது. காலை வேளையில் போருக்குத் தன் சேனைகளைத் தாயார்படுத்தும் தாய்மார்கள் பெயரே வாயில் நுழையாத ஏதேனும் வஸ்துவைச் சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்கள். கௌரவமான அந்தக் காலை உணவை முடிக்காவிட்டால் இந்தச் சமூகத்தில் நம் அந்தஸ்து என்னாவது? அதை அப்படியே படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யலாம் என்பது கூடுதல் வசதி!
கால் செருப்பு பிய்ந்து போனதெற்கெல்லாம் வகை தொகை இல்லாமல் ட்ரீட் கேட்கும் நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே கையைக் கடிக்காத விலைகளில் (அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) புதுப்புது பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். வாழ்க்கையைக் கொண்டாட இது போதாதா நமக்கு? அவற்றின் எடையோ, தரமோ நாம் கொடுக்கிற பணத்துக்கு ஈடாகுமா என்ற கவலை நமக்கெதற்கு? உறைகளைப் பாருங்கள். அவைதான் எவ்வளவு பளபளப்பாக, அழகாக இருக்கின்றன! அது போதாதா?
இவை போதாதென்று நம் மனநிலை புரிந்தே புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள் சில வணிகப் புலிகள். கையில் பணம் இல்லையென்றால் என்ன? சுலபத் தவணைத் திட்டத்தில் சேர்ந்து மாபெரும் லாபம் அடைய வலைவிரிக்கின்றன அங்காடித் தெருக்கள். புடவையோடு பிரஷர் குக்கரையும் சேர்த்தே வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றன தள்ளுபடிச் சலுகைகள்.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற நம் மக்களின் மனநிலைதான். அவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே இருந்த தாம்புக் கயிறு இடைவெளியை நூலிழையாக்கிவிட்டு அதையும் சில நொடி தயக்கத்துக்குப் பிறகு அறுத்தெறிந்துவிடுகிறோம். எதைப் பார்த்தாலும் வாங்கத் துணிகிறபோது, எச்சரிக்கும் மனசாட்சியைத் துச்சமாக நினைத்துத் தவிர்த்துவிடுகிறோம். உலகமயமாக்கலின் விளைவாகப் பல்கிப் பெருகியிருக்கும் வியாபாரச் சுழலில் விரும்பியே சிக்குகிறோம். நாம் அனைவரும் நல்ல வாடிக்கையாளர்கள்தான். ஆனால் இதுவே வாடிக்கையாகிவிடக் கூடாது.
வாங்கப்போகும் பொருட்களின் பட்டியலோடு ஷாப்பிங் செல்வது நல்லது. எதை வாங்குவதாக இருந்தாலும் அந்தப் பொருள் இல்லாமல் எந்தெந்த வேலைகள் தடைபடும், அதனால் நிகழப்போகும் ஆக்கப்பூர்வமான மாற்றம் என்ன என்பதை மனதில் வைத்து அந்தப் பொருளை உங்கள் பட்டியலில் சேருங்கள். அழகுணர்ச்சி தேவைதான். அதுவே நம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடக்கூடாது. தேவையில்லை என்றால் அது சும்மா கிடைத்தாலும் வேண்டாம் என்ற மனநிலைக்கு மாற வேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், எது தேவையோ அந்தப் பொருள் மீது மட்டும் கண்கள் இருக்க வேண்டும். தவறியும் பக்கத்துப் பொருட்களின் மீது பார்வை திரும்பினால், பணம் திரும்பாது.
விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. வீட்டுக்குத் திரும்பியதும் நீங்கள் வாங்கிய தேவையில்லாத பொருட்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். என்னதான் திட்டமிட்டுக் கிளம்பினாலும் யானைக்கும் அடி சறுக்குவது சகஜம்தானே. இரண்டு பட்டியல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதற்கு மேலும் நீங்கள் வாங்கிய பொருட்கள் தேவையானவைதான் என நினைத்தால், நீங்கள் மிகச் சிறந்த வாடிக்கையாளருக்கான விருதைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

Thanks to : The Hindu - Tamil

Sunday, June 23, 2013

இது தீர்வல்ல! உரத்த சிந்தனை - ஜி.கிருஷ்ணசாமி, சிந்தனையாளர்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தனி நபரின் வருமானத்தை அளவுகோலாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குடும்பமோ அல்லது தனி மனிதனோ பொருளாதார தன்னிறைவு பெறாத வரையில், அது ஏழ்மையின் அடையாளமாகவே கொள்ளப்படும். தனி மனிதனின் ஏழ்மைக்கு காரணம், அவனது செலவுகள், வரவை மிஞ்சியதாக இருப்பது தான். வரவை மிஞ்சிய செலவு நீடிக்கையில், மனிதன் கடனாளியாகிறான். அக்கடனை அடைக்க வழி இல்லாத போது, திவாலாகி நடை பிணமாகிறான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது தான், மக்களாட்சியின் தத்துவம். அதை விடுத்து, மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் போது, மக்கள் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளே. திட்டங்கள் தீட்டுவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள கோளாறுகளும், குறைபாடுகளும் தான், நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு அடிப்படை காரணங்களாக அமைகின்றன. மக்களின் பங்களிப்பு எவ்வகையில் அமைய வேண்டும் என்ற கேள்விக்கு, விடையாக இருப்பது, வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுவதும், உற்பத்தி திறனுடன் கூடிய வருமானத்தை அதிகப்படுத்துவதும் தான். இதை நிறைவேற்றுவதன் மூலம், தனி நபர் வருமானம் உறுதி செய்யப்படுவதோடு, அவனது வங்கி சேமிப்பும் அதிகரிக்கிறது. அப்போது, அவனுடைய வாங்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இதுவே சீரான பொருளாதார தன்மையை நோக்கி பயணிக்க உதவுகிறது. விலைவாசி உயர்வாலும், பண வீக்கத்தாலும் அச்சமோ, கவலையோ கொள்ளும் நிலை தவிர்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? ஆண்டுதோறும் திட்டங்களை அதற்கேற்றாற் போல் தீட்டி, செயல்படுத்துவது தான் அதற்கு ஒரே வழி. இதற்கு, தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும், வளர்ச்சியை மைய இலக்காக கொண்டு அமைய வேண்டும். வரவினங்களை பெருக்கி, செலவினங்களை குறைத்து, நம் பட்ஜெட்டுகள் அமைய வேண்டும். அதற்கு முக்கியமாக, இலவச திட்டங்களையும், மானியங்களையும் அறவே கைவிட வேண்டும். அப்போது தான் நமது பட்ஜெட்டுகள் செலவுகளை அதிகமாக கொண்டிராது. அப்போது தேவையற்ற வரிகளை விதிக்க வேண்டிய நிர்பந்தமோ, கட்டாயமோ ஏற்படாது. நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே, தேர்தலில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாக கொண்டு, இலவச திட்டங்களை கணக்கு வழக்கில்லாமல் அறிவித்து, செயல்படுத்தி வருவது தான், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது. பல துறைகளிலும், நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், அதற்கு போதிய நிதி ஆதாரம் தேவை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, பொதுப்பணித் துறை போன்ற அனைத்து துறைகளும், செலவினங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கையில், தொழில் துறையும், வேளாண் துறையும் மட்டுமே, நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு உதவுபவைகளாக இருக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவைகளாக இருக்கிற வேளாண் மற்றும் தொழில் துறைகளை, நமது அரசுகள் புறக்கணித்து வருவதாலேயே, நாம் பொருளாதார பின்னடைவை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இதை கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கும் செயல் ஊக்கம் தராது, கிராமங்கள் தோறும் வங்கிக் கிளைகள் திறப்பதன் மூலம், எந்த பயனும் கிடைத்து விடப் போவதில்லை. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகக் கூறி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, மத்திய அரசு பல லட்சம் கோடிகள் செலவு செய்து நிறைவேற்றி வருவது, பூனை கண்ணை மூடி, பூலோகமே இருண்டு விட்டதாக கூறுவது போல் உள்ளது. தற்போது, இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு நேரடியாகவே பணம் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வேலை ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு கட்டுபடியாகாத விலை ஆகிய காரணங்களால், விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்திட்டம் கிராமப்புற மக்களை சோம்பேறிகளாக ஆக்கவே பயனுள்ளதாக இருக்கிறது. இதனால், இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு பதில், விவசாய தொழிலுக்கு மூடுவிழா கொண்டாடவே வழிவகுக்கப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்திக்கும், ஊரக தொழில் வளர்ச்சிக்கும் தேவைப்படுவது தண்ணீரும், மின்சாரமும் தான். அத்துடன் டீசல், பெட்ரோல் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். ஆனால், இதில் நமது அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதற்கான காரணமும் நமக்கு புரியவில்லை. தண்ணீரும், மின்சாரமும் நம் கைவசமே உள்ளன. இதை ஏனோ, நமது அரசியல் விற்பன்னர்கள் அறியாமல் உள்ளனர் என்பது, மற்றொரு கேள்விக்குறி. வற்றாத ஜீவநதிகளான கங்கை, பிரம்மபுத்திராவின் பெருவாரியான தண்ணீர், நாள்தோறும் கடலில் வீணாக கலந்த வண்ணம் உள்ளது. அந்நீரை, ஆறுகள் இணைப்பு, புதிய கால்வாய் அமைப்பதன் மூலம், தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு பகிர்ந்துஅளிப்பதில், என்ன தடை உள்ளது? ஆறுகள் இணைப்பு சாத்தியமானது தான் என்று தெரிந்திருந்தும், அதை செய்யாது, மாநிலங்களுக்கிடையே நீரை பகிர்ந்து கொள்வதில் மோதல் போக்கை உருவாக்குவதில் குறியாக இருக்கும் மத்திய அரசை, மக்கள் விரோத அரசு என்று கூறுவதை விட, வேறு எப்படிக் கூறுவது? மின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிற, காற்றாலை மற்றும் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தியை பெருக்க, அனைத்து வசதிகளும் நம் நாட்டில் இருக்கையில், இம்முயற்சியில் அக்கறை காட்டாது இருக்கும் நம் மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத் தனத்தை என்னவென்று கூறுவது? நாட்டின் ஒட்டுமொத்த தேவையில், 30 சதவீதம் பெட்ரோல், டீசல் நம் நாட்டிலேயே கிடைக்கிறது. மீதமுள்ள பெட்ரோல், டீசல் தேவையை ஈடுகட்ட மாற்று வழிகள் காண, இதுவரை நமது அரசுகள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. எடுத்ததற்கெல்லாம் இறக்குமதி செய்வது எனும் கொள்கையை, நம் மத்திய அரசு கடைபிடிப்பதால் தான், உலகச் சந்தையில், நம் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதற்கும், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வருவதற்கும், காரணமாக இருக்கிறது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிப்பதால், நமது பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. நமது பணம் நம்மை விட்டுப் போகாமல், நமக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளப்படுமாயின், இத்தகைய சீர்கேட்டை நாம் சந்திக்க வேண்டியது இருக்காது. முதலில் நம் நாட்டிலேயே கிடைக்கிற பொருட்களை, அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கை, மத்திய அரசு கைவிட வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் நமது ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையை வடிவமைக்க வேண்டும். லாபகரமான ஏற்றுமதி கொள்கை, நம் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கவும், ரூபாயின் மதிப்பு உயரவும் வழிவகுக்கும். தகவல், தொழில்நுட்ப துறையில், நம் நாடு வளர்ச்சி அடைந்திருக்கிற அளவிற்கு, வேளாண் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சி எட்டப்படவில்லை. இதற்கு காரணம், நம் தவறான பொருளாதார கொள்கை தான்.

நமது நில வளம், நீர் வளம் நல்ல விதத்தில் பயன்படுத்தப்படாததும், மனித சக்தியை வீணாக்குவதுமே இதற்கு முக்கிய காரணங்கள். அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்காமல் இருப்பதும், புதிய தொழில்நுட்பங்களை கையாளாததும், நமக்கு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தரமான பொருட்களை தயாரித்து, உலகச் சந்தையில் நம் பொருட்களுக்கு மவுசு ஏற்படாத வரையில், தற்போதைய பொருளாதார தேக்க நிலை நீடிக்கவே செய்யும். தரிசு நில மேம்பாடு, சொட்டு நீர் பாசனம், நவீன தொழில்நுட்பம், இயற்கை உரமிடல், கால்நடை அபிவிருத்தி, குடிசை தொழில்கள், பால், முட்டை உற்பத்தி, அவற்றை சந்தைப்படுத்துதல் ஆகியவை வேளாண் தொழில் சிறக்க உதவும். நம் நாட்டில், எத்தனையோ விதமான கச்சா பொருட்கள், இயற்கையாகவே மிக அதிக அளவில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு, நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்க, அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடல் வாழ் பிராணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, போதிய வசதி, வாய்ப்புகளை மீனவர்களுக்கு செய்து தரவேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு திட்டங்களை தீட்டி, அவற்றை முறைப்படி செயல்படுத்தினால், நம் நாடு உலகில் நம்பர் ஒன் நாடாக திகழும் என்பதில், எவ்வித ஐயமும் இல்லை. அதற்கு, முதலில் நம் அரசியல்வாதிகள், மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களாக இராமல், மக்கள் பணத்தை மக்களுக்கே செலவு செய்யும் வெள்ளை உள்ளம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

இ-மெயில்: krishna_samy2010@yahoo.com

ஜி.கிருஷ்ணசாமி, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) எழுத்தாளர், சிந்தனையாளர்

Wednesday, June 5, 2013

Samacheer kalvi is a total shit????

என் மகள் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 98.4% சதவிகிதம் எடுத்து வெற்றிப் பெற்றுள்ளாள். நானும் என் கணவரும் அந்த சந்தோசத்தைக் கொண்டாட கூட முடியவில்லை , காரணம் , முடிவு வெளிவந்த சிறிது நேரத்தில் அவள் சொன்ன வார்த்தைகளால் . . . எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த வார்த்தைகள் ..." amma samacheer is a total shit"

ஆமாம் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்க
­ியது அவளின் ஆதங்கம்.. yes there is a reason for it... அவள் படிக்கும் பள்ளியில் பாடங்களை மனப்பாடம் பண்ணும் முறையில் பாடங்களை சொல்லி கொடுப்பதில்லை..­.முழு பாடத்தையும் வாசித்து எந்த பகுதியில் இருந்து கேள்விக் கேட்டாலும் பதில் சொல்லும் முறையில் தான் அவள் படிப்பாள்..8 வது வரை(matriculati­on board இருக்கும் வரை) நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. சமச்சீர் பாடத்திட்டதை என்று அறிமுகப்படத்தின­ார்களோ அன்று தொடங்கியது இவர்களின் அறிவுப் பஞ்சம்... literally they are starving for knowledge....வெ­றும் மனப்பாட முறை..பாடத்தின்­ பின்பக்கம் கொடுத்திருக்கும­் கேள்வியில் இருந்து மட்டும் கேள்வி.... ஆங்கிலப்புத்தகத­்தில் அதிகமான இலக்கணப்பிழை...­முழுப்பரீட்சை அன்று காலை தொடங்கி அதிகப்பட்சமாக 2 மணி நேரத்தில் முழுப்புத்தக்கத­்தையும் படித்துவிடலாம்.­... பரிட்சையும் எழுதி பாஸாகிவிடலாம் போல. அந்த அளவுக்கு உள்ளது அதன் தரம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...(நிஜம­ாக social science and science தேர்வை வேண்டா வெறுப்பாக எழுதி விட்டு வந்தாள்) சரி வேறு CBSE பாடத்திட்டம் உள்ள பள்ளிக்கோ..ICSE­ பாடத்திட்டம் உள்ள பள்ளிக்கோ மாற்றாலாம் என்றால் மிக கஷ்டப்பட்டு அட்மிஷன் வாங்கிய பள்ளியாயிற்றே. அவள் படிக்கும் பள்ளிக்கூடம் சென்னையில் ஒரு பிரபலமான ஒரு பள்ளிக்கூடம். அங்கு அட்மிஷன் கிடைப்பதே கடினமான ஒன்று. இந்தி எதிர்ப்பு...ஆங்­கில எதிர்ப்பு என்று மக்களை போரடா தூண்டிக்கொண்டு இருக்கும் பெரும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் படித்தது படித்து கொண்டு இருப்பது இந்த பள்ளியில் தான்..ஏன் நம் முதல்வரும் இந்த பள்ளியின் படைப்பு தான்.ஆனால் இன்று அந்த அரசியல் பிரமுகர்களே தங்கள் பிள்ளைகளை CBSC பள்ளிகளுக்கு மாற்றுகிறார்கள்­. அது தனிக்கதை... என் ஆதங்கம் அது அல்ல. ஒரு ICSE பாடத்திட்டதில் 6வது வகுப்புக்கு இணையாக மட்டுமே உள்ளது நமது சமச்சீர் பாடத்திட்டத்தின­் 10வது வகுப்பு. ஒருவேளை இவள் சிறுமியாக இருக்கும்போது என்றால் நிச்சயமாக சமச்சீர்ப் பாடத்திட்டத்தில­் உள்ளப் பள்ளியில் சேர்த்து இருக்க மாட்டோம்.

இங்கு என் ஆதங்கமே நம் மாநில மாணவர்கள் எப்படி அடுத்த மாநில மாணவர்களோடு compete பண்ணமுடியும்?? தற்போது நடந்து முடிந்த IIT ( JEE main) நுழைவு தேர்வில் அகில இந்திய அளவில் மொத்தம் எழுதிய மாணவர்கள் கிட்டதட்ட 18 லட்சம் மானவர்கள். இதில் தமிழகத்தில் தேர்வு பெற்ற மாணவர்கள் வெறும் 3195. இதிலும் சென்னை மாணவர்கள் 2640 பேர் வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் வெறும் 555 பேர் மட்டுமே. தமிழகம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறது என்பதற்க்கு வேறு என்ன சான்று வேண்டும்??
ஏற்கனவே நம் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.கபில்சிபில­் அவர்கள்அகில இந்திய அளவிற்விக்கு இஞ்சினியரிங் கல்லூரிக்கு ஒரே நுழைவு தேர்வு ( single window system) வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்..ஒர­ு வேளை அப்படி ஆகும் பட்சத்தில் என்ன நடக்கும்? வெறும் மேல்தட்டு பிள்ளைகளும் பிற மாநில பிள்ளைகள்(CBSE பயிலும் மாணவர்கள்) மட்டும் தான் இஞ்சினியரிங் கல்லூரிக்குள் நுழைய முடியும். மற்ற மாநிலங்களோதோடு எந்த விதத்திலும் போட்டி போட முடியாத நிலையிலே இப்போது சமச்சீர் பயிலும் நமது குழந்தைகளின் நிலை. ஒரு 6வது வகுப்பு குழந்தைகளுக்கு கேட்கவேண்டிய வினாத்தாளை 10வது வகுப்பு பிள்ளைகளுக்கு கேட்டால் ஏன் 9 முதலிடமும்..56 இரண்டாவது இடமும் 130க்கு மேல் மூன்றாவது இடமும் வராது??
நம் அரசியல்வாதிகள் இங்கு உள்ள எழைகளையும் அடித்தட்டு மக்களையும் தங்கள் கீழ் அடிமைப்படுத்தி வைக்கும் ஏகாதிபத்தியமுறை­யே இன்றைய சமச்சீர் பாடத்திட்டம்...­இதை நல்ல தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு மாற்றியமைப்பது மிக மிக அவசியம். . ...இல்லையென்றால­் தலைவர்களுக்கு பேனர்க் கட்டவும்..பிளக்­ஸ் போர்ட் மாட்டவும் கள்ள வோட்டு போட மட்டுமே நம் பிள்ளைகள் பயன்படுவார்கள்.­...இது ஒரு குழந்தையின் தாயாக என் ஆதங்கப் புலம்பல்...இதற்­கு தயவுசெய்து எந்த அரசியல் ஆர்வலர்களின்...­விமர்சனமோ..ஆக்ர­ோஷக் குரலோ வேண்டாம்...


Saturday, June 9, 2012

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு!

BBA படித்த ஒரு பெண் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவனை (வயது 17 ) திருமணம் செய்து இரண்டுமாதம் வாழ்ந்துவிட்டு தனது தாய்,தந்தை ஆசிவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜோடியாக வருகிறார்கள். அனுபவங்களை இருவரும் பகிர்கின்றனர்.திடீரென உறவினர்கள் வருகிறார்கள் வளர்த்த பெண் இப்படி பண்ணிவிட்டதே என அப்பா மகளை ஒரு அடி கொடுக்க, மனைவியை அடித்த உடன் இந்த பையன் மாமனாரை அடிக்கிறான். மனைவியான பெண் எப்படி எங்க அப்பாவை அடிக்கலாம்? என்று தாலியை கழட்டி கொடுத்து விட்டு பெற்றோருடன் செல்கிறாள். யாரென்று தெரியாத இருவர் இவர்களுக்கு வீடு,வேலை எல்லாம் பார்த்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர். வேறு யாரிடமாவது மாட்டி சின்னாபின்னமாகி விடக்கூடாதே என்று.ஒரு வேளை இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருந்தால் சந்தோசமாக இருந்திருப்பார்களோ?என்னவோ? தொடர்ந்து ஒருசில நிகழ்சிகளை பார்த்தேன் மனது பயங்கரமான வலி.என்னுள் பல கேள்விகள்.முடிந்தால் யோசியுங்கள்.

(1 ) 13 அல்லது 14 வயதில் திருமணம் செய்பவர்கள் காதலித்தோ அல்லது பெற்றோர் சம்மதத்துடனோ

 (2 ) காதலித்து வீட்டை எதிர்த்து ஓடியபின் கள்ள உறவு( இருபாலரும்)

 (3 )பெத்த பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொருத்தருடன் ஓடுவது

(4 )எழுத படிக்க தெரியாதவனுடன் என்ன ஏது விசாரிக்காமல் இரண்டு மூன்று பேர் காதல் வலையில் விழுவது

(5 ) நீண்ட வயது வித்தியாசம்

(6 ) கணவனை பார்த்து அவன், இவன், வா, போ என அழைப்பது

 (7 )அளவுக்கதிகமான ஆடம்பர ஆசை

 (8 ) மிக அழகாக இருப்பவர்கள் பொருத்தமே இல்லாதவர்களுடன் காதல் மயக்கத்தில் ஓடுவது

 (9 )திருமணம் ஆகும் முன்பே சிறுவயதில் காதல் வயப்பட்டு பாலுறவில் ஈடுபடுவது பின்பு கருவை கலைக்க படாத பாடுபடுவது

(10 )பெற்றோரையும் உறவினரையும் தலை குனிய வைப்பது

(11 )சொத்து வேண்டும் பெற்றோருக்கு சோறு கொடுக்க மறுப்பது

 ( 12 ) பொருளாதார பின்னணிகளை ஆராயாதது

 ...........இன்னும் .......இன்னும் .....நிறைய?


 ஏன் இந்த நிலை?ஏன் இந்த அவசரம்? " வெறும் உடலுறவு" மட்டும் தான் வாழ்க்கையா? இதில் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள்தான். "இளமறி தளையறியாது" என்பார்கள் அறியாதது யாருடைய தவறு?பெண்ணுக்கு நிச்சயத்துடன் திருமணம் நின்றாலோ,இரண்டாவது திருமணங்கள் செய்தாலோ அவர்களை திருமணங்கள் செய்பவர்கள் சின்ன சண்டை என்றால் கூட குத்தி குத்தி காயபடுத்துகின்ற கொடுமை சம்பவங்கள் அதிகம் ஆனால் வெளியே அந்த ஆடவன் "தியாகி"போல திரிவான்.அந்த பெண்களின் நிலை மிக பரிதாபம்.இதில் அதிகம் படித்த பெண்களும் சிக்கி கொள்கிறார்கள்.அதிகமாக நகரத்து பெண்கள் குறிப்பாக வாடகை வீடுகளில் இருப்பவர்கள். கிராமங்களில் இது இல்லாமலில்லை.ஆனால் அங்கே உறவினர்கள் கன கச்சிதமாக தீர்த்து வைத்து விடுகிறார்கள். கிராமங்களில் உள்ள பெண்பிள்ளைகள் ஆண் நண்பன் என்று வீடுகளுக்கு அழைத்து வருவது மிக அரிது. தெருக்களில் நின்று அதிகம் பேசினால் என்ன "பல்லை காட்டுகிறாய்" என்கிற கண்டிப்புகள்,விளக்கு வைத்தால் வெளியில் செல்ல கூடாது என்கிற கண்டிப்புகள் ஓரளவு இவர்களின் ஒழுக்க முறைகளையும்,கற்பையும் காக்கின்றன என்பதனை முழுமையாக மறுக்க முடியாது.ஆனால் நகரங்களில் இந்த பராமரிப்புகள் மிக குறைவு.ஆண்-பெண் இருபாலருக்கும் அளவு கடந்த சுதந்திரம் பணப்புழக்கம் "எளிதாக ஆக்கவும் அழிக்கவும்" தெரிந்து வைத்துள்ளார்கள்.திருமண பந்தங்களுக்குள் நுழைய சில அடிப்படைகள் உள்ளதை அறிய மறந்து விடுகிறார்கள் காதலை கண்மூடித்தனமாக மனதில் வைத்து கொண்டு.சில திரைப்படங்களில் நகரத்து பெண்களை மனைவியாக தேர்வு செய்யும் போது சல்லடை போட்டு அரித்து தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதனை கேட்கும் போது மனது இவ்வளவு கீழ்த்தரமாக சித்தரிகிரார்களே என கோபம் வந்ததுண்டு. இப்போது சிறிது யோசிக்கிறேன்.காதலித்து வீட்டைவிட்டு ஓடும் முன்,உறவு கொடிகளை,உடன்பிறப்புகளை, பெற்றோரை சிறிது நினையுங்கள்.பொறுமையுடன் செயல்படுங்கள் பொருளாதார நிலைகளை உயர்த்துங்கள்.அவசர கதியில் ஓடாதீர்கள்.நீங்களாகவே வாழ்க்கையினை தேர்வு செய்தபின் "ஊடகங்களின் முன் ஒப்பாரி" வைப்பது எந்த விதத்தில் நியாயம்.அவர்களிடம் கவுன்சிலிங் சென்று சட்டப்படி பிரிய போவது எனில் உங்களின் முகங்களை ஊடகங்களில் பகிரங்கமாக காட்டினால் அடுத்து ஒரு வாழ்க்கை அமைக்க சிரமப்படவேண்டும் என்பதனை கூட புரிய
 
மறுக்கிறீர்கள்.ஊடகங்களும் எண்ணுவதில்லை. நீங்கள் சாதனை புரிந்ததற்காக ஊடகத்தின் முன் போய் நிற்கவில்லை உங்களைபார்த்து சந்தி சிரிப்பதர்க்காக போய் நிற்கின்றீர்கள் என்பதனை உணர்ந்து உங்களின் முகங்களை மறைக்க சொல்லுங்கள்.பின்பு அமைய இருக்கும் வாழ்விற்கு அது பாதுகாப்பு. இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். இறுதியாக தற்போது காதலிப்பவர்களுக்கும்,காதல் திருமணம் செய்ய இருப்பவர்களுக்கும் "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு". நிறைந்த அன்புடன்................... டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்...

நினைத்தவரை கைப்பிடியுங்கள்!

 
காதல் வயப்படுவது சுலபம். ஆனால், அதைத் திருமணம் வரை கொண்டு செல்ல வேண்டுமானால், மலையையே அசைத்துப் பார்க்கிற மாதிரியான நிலை இருக்கிறது. ஜாதி, மதம், பெற்றோர் எதிர்ப்பு, வருமானம் என பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது. காதலில், "சுபம்' என்ற முடிவை எட்ட வேண்டுமானால், நீங்கள் வணங்க வேண்டியது பெருமாளின் கூர்மாவதாரத்தை தான்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், எக்காலமும் சண்டை நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில், தேவர்களின் பலம் கடுமையாகக் குறைந்தது; அசுர சக்திகள் ஓங்கின. தேவர்கள் பலர் கொல்லப்பட்டனர். "இனியும், தேவர்களின் எண்ணிக்கை குறைந்தால், உலக இயக்கத்துக்கே தடை ஏற்படும்...' என்று சிவவிஷ்ணுவிடம், தேவர்கள் முறையிட்டனர். தேவர்கள் தாக்கப்பட்டாலும், அவர்களுக்கு மரணமில்லாத பெருவாழ்வு வழங்க வேண்டும் என்று சிவவிஷ்ணு முடிவு செய்தார். இதற்கான பொறுப்பை விஷ்ணு தானாக முன்வந்து ஏற்றார்.
நாம் மற்றொருவருக்காக ஒரு வேலை செய்து கொடுக்க வேண்டியிருந்தால், "நாளை பார்த்துக் கொள்ளலாமே...' என மந்தகதியில் இருந்து விடுவோம். அவருக்கு செய்யும் வேலையிலேயே, நமக்கும் ஒரு லாபம் இருக்கிறது என்றால், உடனே களத்தில் குதித்து விடுவோம். விஷ்ணுவும் இந்த ரகம் தான். தேவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினால், அதிலே அவருக்கு ஒரு லாபம் உண்டெனத் தெரியும். என்ன லாபம்? மகாலட்சுமி என்னும் பேரழகி அவருக்கு கிடைப்பாள். இப்போதும் கூட உலகத்தில், பெண் பார்க்கச் செல்பவர்கள், "பெண் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாளே...' என்று கூறும் பழக்கம் இருக்கிறது.
                            
தேவர்களின் உயிர் காக்க, பாற்கடலைக் கடைந்து, அதில் கிடைக்கும் அமுதத்தை எடுத்து தேவர்களுக்கு கொடுப்பதென முடிவாயிற்று. மந்தாரமலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி, கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால், கடலுக்குள் சிக்கிய மலை, அசைய மறுத்தது. கீழே ஏதாவது ஆதாரம் இருந்தால் தானே மலை சுழலும் என்ற நிலையில், விஷ்ணு தன்னை கூர்மம் (ஆமை) ஆக்கி, கடலுக்குள் சென்றார். மலையை முதுகில் தாங்கினார். இலகுவாக கடல் கடையப்பட்டது.
அமுதம் வருவதற்கு முன், மகாலட்சுமி அந்தக் கடலில் இருந்து வெளிப்பட்டாள். பல தேவர்களும் அவளை மணந்து கொள்ள முன் வந்தாலும், தனக்காக சிரமப்பட்டு மலையை முதுகில் சுமந்த விஷ்ணுவுக்கே அவள் மாலை சூட்டினாள்.
பெருமாளின் தசாவதாரம், பல பெருமாள் கோவில்களில் சிலை வடிவில் உள்ளன. ஆனால், தசாவதாரத்துக் கென்றே ஏற்படுத்தப் பட்ட கோவில், ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருக்கிறது. இங்கு பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன. இதில், மச்சம் (மீன்) மற்றும் கூர்ம (ஆமை) அவதாரங்கள், அவதார நிலையிலேயே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. அதாவது, மீன் மற்றும் ஆமை வடிவிலேயே பெருமாளை தரிசிக்கலாம்.
ஒரு பொருளுக்கு மனிதன் ஆசைப்படலாம். ஆசைப்பட்டது கிடைத்து விட்டால், அதையே காரணமாக்கி ஆட்டம் போடக்கூடாது என்பதற்கு, கூர்ம அவதாரம் சான்று கூறுகிறது. ஆமை ஒரு ஓட்டுக்குள் தன்னை உள்ளடக்கி இருப்பது போல, வசதி வரும் காலத்தில், ஐம்புலன்களையும் அடக்கி வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. மகாலட்சுமியை, மகாவிஷ்ணு மனைவியாக அடைந்தார். ஆனால், அவளது செல்வத்தை அவர் சிறிதளவும் அனுபவித்ததில்லை. கூர்மம் போல அடக்கத்துடன் செயல்பட்டார்.
நினைத்தவரை கைப்பிடிக்கவும், எவ்வளவு வசதி வந்தாலும் பண்பு கெடாமல் வாழவும், பெருமாளின் கூர்மாவதாரத்தை
வணங்குங்கள்.

Sunday, June 3, 2012

100 Awesome Firefox Add-Ons for Back to School

Going back to school can be a depressing thought. Added responsibility and stress stand in stark contrast with carefree summer days. Fortunately, a host of clever and helpful Firefox add-ons let anyone tackle assignments, lectures and life with ease. Here are 100 awesome Firefox add-ons for going back to school.

Productivity and Time Management

Getting organized is half the battle in school. Past days saw students manually keep track of assignments either with paper or their memories. In the digital age, a bevy of programs are available to keep kids on the honor roll track. Here are the best add-ons for productivity, research and productivity.
  1. Schooler: A complete package of tools to help with all your school work.
  2. LeechBlock: A productivity add-on tool blocking sites that suck the hours from your day.
  3. SkipScreen: A great add-on that skips unnecessary pages and ads at popular sites.
  4. Lazarus: Form Recovery: Protect your work from blackouts, computer crashes and server timeouts. This great app saves information input into forms in case of equipment failure.
  5. TimeTracker: Track general browsing habits such as time spent at specific sites and make your surfing more efficient.
  6. Procrastato: This add-on monitors sites you flag as time wasters then reminds you to get back to work after a set period of time.
  7. Web Reminder: A productivity tool that also motivates, Web Reminder offers an inspirational quote to get you back to work after wasting time at pre-selected sites.
  8. iBistro OPAC: Easy Record View: Reduce the number of clicks and key strokes while using popular library databases.
  9. SchoolTube: Search classroom appropriate media for lectures or presentations.
  10. Smartsheet Quick Access: Effective online task management, file sharing and discussion resources increase the performance of web tools you already use.
Research
School research projects are rarely exciting and, as a result, tend be time consuming. Use these apps to make your research more efficient and, maybe, even a little more fun.
  1. SmarterFox: Browse Faster: Speed up common tasks, search from your address bar and streamline your browsing.
  2. Diigo: Web Higlighter and Sticky Notes: Organizes web notes and highlights for any web page to make research more productive.
  3. MyStickies: Place notes on any web site, then organize your thoughts with tabs.
  4. Trailfire: Leaving a note flags a particular website as interesting, allowing easy access later.
  5. Net Notes: Save notes on websites directly to your bookmarks.
  6. DeeperWeb: Quickly and easily navigate Google searches with this app’s innovative "Tag-Cloud" interface. This app finds answers, definitions and news in no time.
  7. Rate My Professors Search Engine: A tool allowing users to directly search ratemyprofessors.com to find information on a teacher’s grading style and classroom expectations.
  8. Shmoop: Searches study guides and teaching resources for help with literature and history.
  9. SimplyBox: Search the web and share results with friends this is a great tool for group research projects.
  10. Research Words: Easily research any word on a page with a simple right-click.

Math

Math is notoriously unpopular. Polls frequently rank math as the least popular subject among students. Ease the pain with these helpful Firefox add-ons to make math class a breeze.
  1. Open Mathematical Encyclopedia: An encyclopedia of math terms from basic to complicated.
  2. FireCal: A comprehensive calculator for class or simple everyday calculations.
  3. Graphing Calculator Toolbar: Handles up to 5 equations in your browser’s toolbar then graphs the results into your browser.
  4. Status-bar Calculator 2.1: A small calculator that sits in your status bar, this add-on does simple math and computer science calculations.
  5. MATH2D: An add-on for graphing functions.
  6. MATH3D: Graph functions in 3D with this simple and easy to use calculator.
  7. FireMath: An equation generator for complex math and engineering projects.
  8. avzCalculator: This simple extension also allows text in addition to numeric input.
  9. Simple Calc: Evaluates simple arithmetic expressions in the URL bar with quick shortcuts.
  10. Calculator: Look past calculations and common conversions with this simple number cruncher.
  11. Calculator-Bar: This calculator display over your status bar is quick and intuitive.
  12. Status-bar Calculator: A status-bar calculator that can be expanded as needed.
  13. Galculator: A calculator plus alarm clock, this add-on also warns users about common mistakes.
  14. Calc: Add this simple calculator to your sidebar and never worry about numbers again.
  15. QuickCalc: Enter any algebraic expression into this calculator located just above the status bar.

Science

Stability in science-based fields has sent students flocking to science-based majors like pharmacy and nursing. Get these apps for your Firefox browser and streamline your efforts.
  1. hyperconverter: From velocity to energy and temperature, convert any and all units with this extremely helpful conversion add-on.
  2. Eccellio Science: Up to date and focused results from accredited, professional sites are all this science search site offers..
  3. BIobar: A browsing toolbar for studying life sciences such as biology.
  4. Life Science Dictionary Tool: A great tool that translates life science terms between Japanese and English.
  5. i-cite: Web search for scientists, this add-on aggregates content from sites such as Google Scholar then adds field specific information.
  6. Thomson Reuters Master Journal List: Search Thomson Reuters massive database of journals for valuable information directly from your search box.
  7. Labmeeting: A tool for organizing journal articles from leading science publications.
  8. Weather Watcher Live: Monitor and track weather conditions in real time based on neighborhood.
  9. HealthVisit Search Engine: Searches all top health and medical information sites such as WebMD and the CDC in one easy command.
  10. ZINC: An open source extension for 3D visualization, this app can be used scientific and medical purposes.
  11. OpenMedSpel: Automatically spell checks complicated medical and scientific terms often missed by other checkers.
  12. FireGoose: Exchange data between biology and other field-specific web resources.
  13. hbar: A physics search tool linking to web resources popular among academics.
  14. WeatherBug: Commonly used for simple forecasts and weather updates, this extension offers great general meteorology information.
  15. Mail Online: This database from the British-based Daily Mail offers thousands of useful science and health stories for any class project.

English

English classes are frustrating. Teachers often make students buy their own copies of required reading materials and research papers are never fun. Use these Firefox extensions to make English easier.
  1. Bibliomania: Search for references to classic English literature with the help extension.
  2. Citavi Picker: A reference management app for students and researchers this tool is invaluable for retrieving information from a host of sources.
  3. Merriam-Webster: This add-on brings the power of one of America’s most respected dictionary’s right onto your browser.
  4. Project Gutenberg: Never pay for another public domain classic ever again! This amazing app is a search engine for an online library of material in the public domain, which means everyone has a right to read it.
  5. Google Books: Search Google Books with this extension that lets users read whole books or sections of new releases.
  6. OpenBerg Lector: A great e-text reader for online books that makes creating your own digital library simple and fun.
  7. Books Search: Search books available in electronic libraries with this add-on.
  8. Compare Books Prices: Save on the cost of required reading materials with this app allowing users to comparison shop.
  9. What’s On My Bookshelf Wishlist Submitter: Trade books with students to save money and time.
  10. Longman English Dictionary 2008: A complete dictionary of modern English words and terms.
  11. Mediabooks Search: Search the selection of online books made available by MediaBooks.
  12. CiteSmart: An extension for research papers keeping track of citations on popular sites such as Google Books.
  13. PaperbackSwap.com Book Search: Trade paperbacks and used textbooks with other penny pinching students.
  14. LibraryThingPlus: Search library catalogs online and from the comfort of your own home. This valuable extension saves time looking for books during your next research paper.
  15. WordIQ Toolbar: With one click, search the Web for information on any word, term or phrase.
  16. Thesaurus – Reference.com: Offers synonym suggestions with simple commands.
  17. Wordpot: The Keyword Finder: Search dictionaries, thesauruses and the Internet for unfamiliar terms.
  18. Dicitonary.com: Check spelling or look up words with this fast simple and easy dictionary.
  19. Look Up in Dictionary: This app incorporates Apple’s OS X dictionary into your browser
  20. Dictionary Lookup Extension: Highlight any word and immediately find its meeting.

Foreign Languages

Studying a foreign language in school always seems pointless. After each semester, students often doubt they’ve greatly advanced their understanding of the language and many have taken hits to their grade point averages. Next time you take a foreign language, use these add-ons and maybe learn something.
  1. bab.la dictionary toolbar: Translate between English and up to ten other languages. Includes over 1 million translations using different grammar, synonyms and pronunciation.
  2. RAE Spanish Dictionary: A dictionary of proper Spanish written by the Real Academia Española in Spain.
  3. German Dictionary: This German dictionary spell checks German text on Mozilla products.
  4. Arabic spell-checking dictionary: Fast and easy spell checker for assuring proper Arabic use.
  5. ImTranslatro: Translate phrases in over 1640 different language combinations using anything from Arabic to Vietnamese.
  6. Free Translate!: Quickly translate between English, Russian, French and German.
  7. Latin Dictionary: Latin is a popular course for aspiring law students since many legal terms are based in the language. Get this Latin dictionary and carpe diem.
  8. Portuguese Dictionary: This dictionary will also spell check anything written in Portuguese.
  9. Hebrew Spell-checking diciontary: A spell checker and dictionary for Firefox, this Hebrew spell checker works for only for modern dialects.
  10. Translate – Reference.com: Get fast translations in dozens of languages with this simple app.
  11. mid: An unbelievable collection of over 1000 dictionaries and offering translation services in 12 different languages. A must for any linguistic student.
  12. WordReference Translator: Highlight a word, press "D" and get a translation. Nothing could be simpler or faster.
  13. gTranslate: A shortcut to Google’s translation services, this add-on translates any highlighted text.
  14. DictCN: An online English to Chinese dictionary for beginning students.
  15. Icelandic Dictionary: Icelandic is generally regarded as unnecessarily complicated by students and expert linguists alike. This dictionary is great for anyone with the cojones to learn the language of Bjork.
  16. Danish Dictionary: Checks Danish spelling entered into any text field.
  17. Czech spell checking dictionary: This great spell czech… Whoops, I mean, spell checker is based on the Open Office dictionary and works on all Mozilla applications.
  18. Nepali Dictionary: A spellchecker and dictionary for anyone learning Nepali.
  19. Belarusian Dictionary: Belarus is one of Europe’s most wired countries making the number of translators and dictionary available online vast. This is the best.
  20. Urdu Dictionary: Based on an Urdu word list provided by a cultural non-profit, this great extension can help anyone taking this language spoken in Pakistan and India.

Social Studies

Getting a general understanding of historical events from the History Channel is not enough for the well-rounded, educated person. Use these sites to gain an encyclopedic knowledge of history and ease any class.
  1. ISI Web of Knowledge: Quickly find, analyze and share history information easily and directly from your browser search box.
  2. Wikipedia: The world’s most powerful, and free, collaborative encyclopedia can now be a permanent feature on your computer with this add-on.
  3. QuoteBar: Search a large collection of user submitted quotes for research papers or general knowledge.
  4. termBlaster: A powerful, one click search engine that uses over 100 search engines and encyclopedias to find just what you need.
  5. UC Libraries Research: Quit wasting precious time with research papers. Use this extension to access the University of Cincinnati’s database for valuable history resources.

Social Sites

People rarely remember the information they actually learned in school. But who can’t immediately recall their friends? Check out these sites for getting and keeping people connected.
  1. Bookmarker: Integrate Facebook into your browser and get notifications or share content.
  2. Yoono: An all in one app for social networking and instant messaging this browser sidebar makes access to Facebook, MySpace and Twitter a breeze.
  3. ShopTalk: A social searching extension, ShopTalk lets users see what people are saying about a particular page or site.
  4. Dai-sy: Instant messaging, file sharing and bloging between people visiting the same site. Collaborative searching at its finest.
  5. Power Twitter: Make Twitter better with this app enhancing the usability of the social site.

Sunday, May 13, 2012

தமிழ் நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரின் கல்வி தகுதி 6th Std பெயிலாம்????? வெளங்கிடும் தமிழ் நாடு.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முக்கூர் சுப்பிரமணியன். இவர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார். 2009ம் ஆண்டு வேட்பு மனு தாக்கல் செய்த, அபிடவிட்டில் செய்யாறு தாலுகா, கொருக்கை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1972 ஏப்ரல் 21ம் தேதி, ஆறாம் வகுப்பு படித்து பெயிலானவர் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த, 2011ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் (2011 மார்ச் 11ம் தேதி), தமிழ்நாடு திறந்த வெளி பல்கலையில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முக்கூர் சுப்பிரமணியன் கொடுத்த தகவலின்படி, 2009-10 கல்வியாண்டில் முதலாமாண்டும், 2010-11 இரண்டாம் ஆண்டும், 2011-12 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டும் படித்திருக்க முடியும். தமிழக அரசு சார்பில், வெளியிடப்படும் அமைச்சரின் விவரங்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள் அடங்கிய வெப்சைட்டில், அவருடைய கல்வித்தகுதி, பி.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரின் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், "2009ம் ஆண்டு பி.ஏ., முதலாமாண்டு தேர்வு எழுதியது உண்மை. அதில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவே செல்லவே இல்லை. அப்படி இருக்க அவர் எவ்வாறு, பி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க முடியும்' என, கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், நான் பி.ஏ., படித்து வருகிறேன். முதல் இரண்டாண்டு தேர்வு எழுதியுள்ளேன். மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவில்லை. பி.ஏ., பட்டப்படிப்பு முழுவதும் முடிக்கவில்லை. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெப்சைட்டில், கல்வித்தகுதி என்ன வெளியிடப்பட்டுள்ளது என, எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன்.இவ்வாறு கூறினார்.

Saturday, May 5, 2012

Inspiring Quotes.


  
 Failure is just another way to learn how to to do something right - Marian Wright

தோல்வி என்பது சரியானதை எப்படி செய்வது என கற்றுக்கொள்ளும் 
ஒரு வழி ஆகும்.

 


 
One great thing I have noticed about living by myself: All of my annoying habits seemed to have disappeared. - Merrill Markoe 


நான் நானாக வாழும் போது, என்னை எரிச்சலூட்டும் பழக்கங்கள் மறைந்து போகின்றன.  







 
Pretending is a very valuable skill - Meryl Streep

 
பாசாங்கு செய்வது ஒரு மதிப்பு மிக்க திறமை.







 Children trend to imitate their parents, despite their teacher's attempts to teach them good manners. - Aldo Cammarota
 

ஆசிரியர்கள் நல்ல போதனைகளை பயிற்றுவித்தாலும், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் பண்புகளையே பிரதிபலிகிறார்கள்.





One can go to war alone, but you can't build peace alone. - Jacques Chirac
 
தனியொரு ஆளாக போருக்கு போகலாம், ஆனால் அமைதியை தோற்றுவிக்க முடியாது.


Courtesy: Reader's Digest & Google

Wednesday, May 2, 2012

விவசாயிக்கு பத்மஸ்ரீ

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி என்ற விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது.தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

NEWS : Puthiyathalaimurai

நம்முடைய மதிப்பு!


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.


பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி

அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி

“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்

அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.

அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க !

Saturday, April 28, 2012

Manjrekar shocked at Sachin accepting RS seat

As former cricketers and sportsmen welcomed his nomination to Rajya Sabha, Sanjay Manjrekar, who had played with Sachin Tendulkar, said he was shocked by his decision to accept the government's offer.

There were others who too shared the views of Manjrekar who said Tendulkar was not known to expressing his views on public issues.

Asked for his reaction on Tendulkar being made a Rajya Sabha member, Manjrekar said, "Actually shocked by the story itself. First by the nomination as it came without any warning. And that Sachin has accepted it is even more shocking.

"When I visualise what Sachin could possibly do after retirement, I thought something connected to cricket, coaching and all that, may be some business or social activity. But Rajya Sabha MP after retirement or even at this stage of career is something that was not even in my wildest guess," Manjrekar said.

Manjrekar, however, said that Tendulkar could find time to take part in Parliament proceedings if he wants to.

"Nowadays he does not play in each and every match India plays. He does out play for Mumbai in Ranji Trophy. If he wants to take out time (for Parliament) he can and that is what people would expect. He is not going to be there everyday, in each Parliament session. He can be there for enough time to make a difference.

"But it has taken me completely by surprise. I had known him as a certain kind of person. I don't know he had this kind of inclination that would make him accept this offer", he said.

Manjrekar said it would be a different challenge for Tendulkar who is a quiet person by nature and has has not taken stand even on cricketing issues.

Cricket commentator and analyst, Harsha Bhogle, felt that Tendulkar does not have the experience to be an active Parliamentarian.

"Lots of people are now trying to get mileage out of Tendulkar. I am not sure if it is the greatest idea. If the idea is to honour Tendulkar by giving him a seat in Rajya Sabha that's OK, but if you want to see Tendulkar as an active Parliamentarian, looking after social causes, having a say in the future of this country he does not have the experience," Bhogle said.

"I have known him so closely. His life has been surrounded by cricket, out and out in cricket. He is that kind of person. I expect him to be playing another 12 months and take it from there. So he will be playing for 12 months and the cricket calendar is so tight and he also misses series due to fitness issues. So I don't know how he will have time for Parliament."

Tendulkar's teammate Virender Sehwag tweeted, "My first ipl game against a Rajya Sabha member. Hope the weather holds n we get a full game today."

IPL franchise Royal Challengers Bangalore owner Vijay Mallya said he was delighted that Tendulkar will become a Rajya Sabha member.

"Delighted to hear on the news that Sachin has been nominated to the Rajya Sabha. Befitting an extraordinarily accomplished Indian," he said.

Former IPL chief Lalit Modi wrote on his Twitter page, "Amazing to see the storm that Sachin's nomination has generated. I think he'd have preferred a Bharat Ratna after all."

தாண்ட முடியாத துயரக்கோடு: உரத்த சிந்தனை, ஆர்.நடராஜன்

நமக்கு நாமே மொட்டையடித்துக் கொண்டால், அது நேர்த்திக்கடன்; அடுத்தவர் அடித்தால் ஏமாற்று வேலை; அரசாங்கமே செய்தால், அதன் பெயர் பட்ஜெட். இதில், கிண்டலுடன் நிஜமும் இருக்கிறது. கிண்டல், நிஜத்தின் குரூரத்தைக் குறைக்கிறது. பொருளாதார விவாதங்கள் தடம் மாறும் போது, அரசியல் சடங்குகளாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் மற்றும் விவாதிக்கப்படும் போது, முந்தைய ஆண்டு பட்ஜெட்டின் நிறைகுறைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. எல்லாமே சடங்கு என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை.
லைசன்ஸ், கோட்டா முறையிலிருந்து மாறி, புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்து, 20 ஆண்டுகளாகின்றன. இருந்தாலும், முக்கால்வாசி மக்கள் வசதியாக வாழவில்லை. அடித்தட்டு மக்களின் சராசரி தினசரி வருமானம் எவ்வளவு என்பதை, ஏர்கண்டிஷன் காரில் வந்து, ஏர்கண்டிஷன் அறைகளில் இருந்து விவாதிக்கும் பணக்கார அதிகாரிகள், நிபுணர்கள் யதார்த்தத்திற்கு புறம்பான தகவல்களைத் தருகின்றனர். இருந்தாலும், இந்தத் தவறான தகவல்களின் அடிப்படையிலேயே, பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், வருடா வருடம் குறிப்பிடப்பட்ட வரவுகள் முழுமையாக வந்தனவா, வரவில்லை என்றால் ஏன் வரவில்லை, செலவுகள் வரம்புகளைத் தாண்டின என்றால், ஏன் எதற்காக, உபரித் தொகை எப்படி சமாளிக்கப்பட்டது என்பது பற்றி பொதுமக்கள் தகவலுக்காக, எந்த ஆவணமும் வெளியிடப்படவில்லை. வெறும் சடங்குகளாக வெளிவந்த அறிக்கைகளில், முழு உண்மைகளும் சொல்லப்பட்டனவா என்பது சந்தேகமே. சில தவறுகளுக்கு, யார் காரணம் என்பது சொல்லப்படவில்லை; அப்படிக் காரணமானவர்கள் மீது, எந்த தண்டனையும் இல்லை. இந்நிலையில், பட்ஜெட் என்பது வெறும் சடங்கு தானே.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏதோ சொல்வார். ஆளும் கட்சியினர் மேஜையை தட்டுவர்; எதிர்க்கட்சியினர் மைக்கை தட்டுவர். பட்ஜெட் வெளியான தினத்தில் பத்திரிகைகள், சில தொழிலதிபர்களையும், வியாபாரிகளையும் பேட்டி காணும். தொலைக்காட்சிகள் அறிவுஜீவிகளையும், அரசியல்வாதிகளையும் அருகருகே வைத்து, விவாதம் நடத்தும். மாநிலத் தலைநகரங்களில் ஏதாவது ஒரு அமைப்பு, பொருளியல் நிபுணர்களை அழைத்து, பட்ஜெட் பற்றிப் பேசச் சொல்லும். அவரும் எத்தனையோ விஷயங்கள் பற்றிப் பேசி, இடைஇடையே நடப்பு பட்ஜெட் பற்றி, சில வார்த்தைகள் சொல்வார். சில திருத்தங்களுடன் சட்டசபைகளிலும், பார்லிமென்டிலும் பட்ஜெட் நிறைவேறும். அப்புறம் அதற்குப் புறம்பாக எது நடந்தாலும், யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படியானால், பட்ஜெட் எதற்கு? நல்ல கேள்வி.
ஒரு சம்பவம், இதை நியாயப்படுத்தும். தினமும் ரயில் தாமதமாக வந்ததால் நொந்து போன ஒரு பயணி, நேராக ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குப் போய், "ஏனய்யா... எல்லா ரயில்களும் தாமதமாக வருகின்றன. எதற்கய்யா இந்த அட்டவணை?' எனக் கேட்டு, தான் வாங்கியிருந்த ரயில்வே கால அட்டவணையை மேஜையில் தூக்கிப் போட்டார். கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ஸ்டேஷன் மாஸ்டர், "மிஸ்டர் பாசஞ்சர்... டைம்டேபிள் என்ற ஒன்று இல்லாமல், ரயில்கள் தாமதமாக வருவதை எப்படிக் கண்டுபிடிப்பது?' தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இப்படித் தான். துண்டு விழுவதைத் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்படும் கணக்கு. இது வெறும் நிதிநிலை அறிக்கை, நிதி நிலைக் கட்டுப்பாட்டு ஆவணம் அல்ல. எப்படியிருந்தாலும், பட்ஜெட் தயாரிப்பில் பொருளாதார நிபுணர்கள் ஈடுபடுவது உண்டு. தகவல்கள், புள்ளி விவரங்கள் தருவதே அவர்களது வேலை. தொகையை அரசியல் தலைமை தான் முடிவு செய்யும். ஆக, பட்ஜெட் என்பது, பொருளாதாரப் போர்வையில் வெளிவரும் அரசியல் அறிக்கை. அரசாங்கம் எதையும் கேட்டுக் கொள்ளாது என்ற போதிலும், அரசியலுக்கும், அரசாங்கப் பொருளியல் துறைக்கும் அப்பாற்பட்ட அமைப்புகளும், அறிவுஜீவிகளும் அவ்வப்போது ஏதாவது சொல்லாமல் இருப்பதில்லை.
பூகோளம் சொல்லும் அட்சரேகை, தீர்க்க ரேகை, பூமத்திய ரேகை போல், "கரீபீ ரேகா' எனப்படும் வறுமைக்கோடும், கற்பனைக் கோடே. பூகோள ரேகைகள் எங்கே இருக்கும் என்பதில், மேப் வரைபவர்களிடையே முரண்பாடுகள் இல்லை. ஆனால், வறுமைக்கோடு சரியாக நிர்ணயிக்கப் படுவதில்லை. அது கஷ்டம் என்பதே காரணம். வறுமைக் கோட்டுக்கு பதிலாக, வளமைக்கோட்டை அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம். பெருநகரங்களில் அதி உயர்மட்ட பணக்கார வர்க்கம், 5 சதவீதம், கிராமப்புறங்களில் 1 சதவீதம். யார், யார் ஏழைகள் என்று நிர்ணயிப்பதில் உள்ள கஷ்டங்கள், யார், யார் பணக்காரர் என்பதில் இல்லை. எனவே, வளமைக்கோட்டின் வழியே சென்று, பட்ஜெட் போடலாம். அது மறைமுக வரியின் அளவைக் குறைத்து, நேரடி வரிவிகிதத்தை அதிகமாக்கும். அதுவே நல்லது என்பது, மக்கள் இயக்கங்களின் தேசியப் பேரவையின் கருத்து. சுதந்திரம் பெற்ற புதிதில் பணக்காரர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தனர். அடுத்த தலைமுறை மக்கள் பிரதிநிதிகள், பணக்காரர்கள் ஆயினர். எனவே, இவர்களுக்கு வறுமைக்கோட்டை விட அதிகமாகவே, வளமைக்கோடு பற்றி தெரியும். தாம் தாண்டி வந்துள்ள கோட்டைப் பற்றி, இவர்களுக்கு கவலை இல்லை. பார்லிமென்டும், தேர்தல் கமிஷனும் பெற்ற தகவல்படி, ஒரு மக்கள் பிரதிநிதியின் சராசரி சொத்து மதிப்பு, 10 கோடி ரூபாய்க்கும் மேல். அதாவது, இது தரப்பட்ட கணக்கு. மறைத்த தொகைகளையும் சேர்த்தால், அது, 100 கோடியையும் தாண்டலாம். இது, ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றாலும், ஒரு விபரீத உண்மையாகி விட்டது.

மக்களும் சுமாராக வாழ வேண்டுமென்றால், எல்லாருக்கும் வேலைவாய்ப்பு தேவை. அதற்கான திட்டங்கள், ஏட்டளவில் தான் உள்ளன. "யானை சிந்தும் சோற்றுக் கவளத்தின் சிறு பகுதி, பல எறும்புகளுக்கு உணவாகும்...' என்று, ஒரு தமிழ்ப் பாடல் உண்டு. அதன்படி நாட்டின், 3 சதவீத அதிகோடீஸ்வரர்கள், செலவுகளைக் குறைத்துக் கொள்ளாத பட்சத்தில், அவர்கள் மீது அதிக அளவு வரி விதிக்கலாம். ஆனால், "இன்றைய நடப்பின் படி, நடுத்தர வர்க்கத்திற்கு தரப்படுவதை விட, அதிக அளவு வரிச் சலுகைகள், தனியார் நிறுவன உயர்நிலை நிர்வாகிகளுக்கு தரப்பட்டு இருக்கிறது. அந்த உயர்நிலைச் சங்க நிர்வாகிகள், அரசாங்கத்துடன் நெருக்கமான உறவு கொள்வது போல், நடுத்தர வர்க்க அமைப்புகள் செய்ய முடிவதில்லை என்பதனால் பயன்பெறவில்லை' என்கிறது, "நேஷனல் அலையன்ஸ் பார் பீப்பிள்ஸ் மூவ்மென்ட்' என்ற அமைப்பு.
உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிறுவனங்களிடம் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகை, கடந்த ஆண்டு மட்டும் பல மடங்கு அதிகமாகி இருக்கிறது. இப்படியே கடன் சுமை உயர்ந்து கொண்டே போனால், நாடு தாங்காது. எனவே, வரி விதிப்பிலும், செலவினங்களிலும் உருப்படியான சீர்திருத்தங்கள் தேவை. கல்வி, வீட்டு வசதி இனங்களில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றால், வரி விகித வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். நலத்திட்டங்கள் பேசப்படும் அளவுக்கு செயல்படுத்தப் படுவதில்லை என்பதை விட வேதனையானது, சில இனங்களில் அதிகார வர்க்கத்தின் மெத்தனம் காரணமாக ஒதுக்கப்பட்ட நிதி, செலவழிக்கப்படாமல் கஜானாவுக்கே திரும்புகிறது. சில உதவிகள், உரியவர்களுக்கு போய் சேருவதில்லை, யாரோ சுருட்டிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் சாமர்த்தியமான பணக்கார உறவினர்களே, வீட்டு மனை, பயணம் போன்ற சலுகைகளை, "சமூக நல ஊழியர்' என்ற போர்வையில் பெறுகின்றனர். இதற்கென்று எதற்கு ஒரு பட்ஜெட்? இதேபோன்ற நிலை தொடரும் வரை, எல்லா பட்ஜெட்களும் வெறும் சடங்குகளாகவே இருக்கும், தேர்தல் அறிக்கைகள் போல! அதாவது, எதையும் சொன்னால் போதும், செய்ய வேண்டாம் என்றபடி. ஆயினும், தேர்தல் அறிக்கைகளுக்கும், நிதிநிலை அறிக்கைகளுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முன்னதில் எழுத்துக்கள் அதிகம்; பின்னதில் எண்கள் அதிகம். ஆள்பவர்கள் எண்களை எடுத்துக் கொண்டு, எழுத்துக்களை மக்களுக்கு தருகின்றனர். அதுதான் பட்ஜெட்; அதுதான் ஜனநாயகம். இ-மெயில்: mailto:hindunatarajan@hotmail.com - ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

Saturday, April 23, 2011

Indian Rupee Symbol Download

Following the procedures below would enable you to install the Indian Rupee Symbol Font to your computer and type/key in/view the Font on various applications in your computer.

Instructions for Installing Indian Rupee Symbol Font

Step I

Download the Indian Rupee Symbol Font from here (or any other reliable source).

If the Font has been previously downloaded in your computer, then please ignore this step

Step II

Copy (Ctrl+C) the downloaded Font and Paste in to your computer's "FONTS FOLDER"

(START>CONTROL PANEL>FONTS (double click) > Paste (Ctrl+V)

Step III

The installation is successful; you can preview the pasted Rupee Font by double clicking the font icon

Instructions to Use/Key in Indian Rupee Symbol Font

Step I

Once the Indian Rupee Symbol Font is successfully installed in your computer, open any document preparing software e.g. Notepad, MS Office etc.

Step II

Open a Document. Go to Font and select "Rupee Foradian" or "Rupee" Font. Click OK

Step III

Press, Grave Acent Symbol Key (just above "Tab" button on your Keyboard) to type the new Rupee symbol on your Document

Thanks: National Portal Content Management Team

Friday, April 22, 2011

'Jana Gana Mana' - Spare a minute to think!

Controversies

1. Historical significance:-

The poem was composed in December 1911, precisely at the time of the Coronation Durbar of George V, and "Bharat Bhagya vidhata" and "Adhinayaka" is considered by some to be in praise of King George V and not God. The composition was first sung during a convention of the then loyalist Indian National Congress in Calcutta on Dec. 26, 1911.[2] It was sung on the second day of the convention, and the agenda of that day devoted itself to a loyal welcome of George V on his visit to India. The event was reported thus in the British Indian press:

"The Bengali poet Babu Rabindranath Tagore sang a song composed by him specially to welcome the Emperor." (Statesman, Dec. 28, 1911)
"The proceedings began with the singing by Babu Rabindranath Tagore of a song specially composed by him in honour of the Emperor." (Englishman, Dec. 28, 1911)
"When the proceedings of the Indian National Congress began on Wednesday 27th December 1911, a Bengali song in welcome of the Emperor was sung. A resolution welcoming the Emperor and Empress was also adopted unanimously." (Indian, Dec. 29, 1911)

Proposed arguments

Many historians aver that the newspaper reports cited above were misguided. The confusion arose in British Indian press since a different song, "Badshah Humara" written in Hindi by Rambhuj Chaudhary [3], was sung on the same occasion in praise of the monarch. The nationalist Indian press stated this difference of events clearly:-

"The proceedings of the Congress party session started with a prayer in Bengali to praise God (song of benediction). This was followed by a resolution expressing loyalty to King George V. Then another song was sung welcoming King George V." (Amrita Bazar Patrika, Dec.28,1911)
"The annual session of Congress began by singing a song composed by the great Bengali poet Babu Ravindranath Tagore. Then a resolution expressing loyalty to King George V was passed. A song paying a heartfelt homage to King George V was then sung by a group of boys and girls." (The Bengalee, Dec. 28, 1911)

Even the report of the annual session of the Indian National Congress of December 1911 stated this difference:

"On the first day of 28th annual session of the Congress, proceedings started after singing Vande Mataram. On the second day the work began after singing a patriotic song by Babu Ravindranath Tagore. Messages from well wishers were then read and a resolution was passed expressing loyalty to King George V. Afterwards the song composed for welcoming King George V and Queen Mary was sung."

On 10 November 1937 Tagore wrote a letter to Mr Pulin Bihari Sen about the controversy. That letter in Bengali can be found in Tagore's biography Ravindrajivani, volume II page 339 by Prabhatkumar Mukherjee.

"A certain high official in His Majesty's service, who was also my friend, had requested that I write a song of felicitation towards the Emperor. The request simply amazed me. It caused a great stir in my heart. In response to that great mental turmoil, I pronounced the victory in Jana Gana Mana of that Bhagya Vidhata [ed. God of Destiny] of India who has from age after age held steadfast the reins of India's chariot through rise and fall, through the straight path and the curved. That Lord of Destiny, that Reader of the Collective Mind of India, that Perennial Guide, could never be George V, George VI, or any other George. Even my official friend understood this about the song. After all, even if his admiration for the crown was excessive, he was not lacking in simple common sense."

Again in his letter of 19 March 1939 Tagore writes,

"I should only insult myself if I cared to answer those who consider me capable of such unbounded stupidity as to sing in praise of George the Fourth or George the Fifth as the Eternal Charioteer leading the pilgrims on their journey through countless ages of the timeless history of mankind." (Purvasa, Phalgun, 1354, p738.)

Moreover, Tagore was hailed as a patriot who wrote other songs too apart from "Jana gana Mana" lionizing the Indian independence movement.He renounced his knighthood in protest against the 1919 Jallianwala Bagh Massacre. The Knighthood i.e. the title of 'Sir' was conferred on him by the same King George V after receiving the Nobel Prize in Literature for "Gitanjali" from the government of Sweden. Two of Tagore's more politically charged compositions, "Chitto Jetha Bhayshunyo" ("Where the Mind is Without Fear" :Gitanjali Poem#35) and "Ekla Chalo Re" ("If They Answer Not to Thy Call, Walk Alone"), gained mass appeal, with the latter favoured by Gandhiji and Netaji.

2. Literary Interpretations:-

The proponents of the controversy stress the usage of the following words and phrases to claim that Jana Gana Mana was written for the King and the Queen of England-

Stanza 1: (Indian) People wake up remembering your(King Georg V's) good name and ask for your blessings and they sing your glories.
Stanza 2: Around your 'throne'(refers to King) people of all religions come and give their love and anxiously wait to hear your kind words.
Stanza 3: Praise to the 'King' for being 'the charioteer'.
Stanza 4: Drowned in the deep ignorance and suffering, poverty-stricken, unconscious country, Waits for the wink of your eye and your mother's (the Queen's) true protection.
Stanza 5:In your compassionate plans, the sleeping Bharat (India) will wake up. We bow down to your feet O’ Queen, and victory come to Rajeshwara (the King).

Proposed arguments

The supporters of the nationalist message of Jana Gana Mana claim that "King","Throne" and "chariot" refer to the Almighty (for e.g. Lord Krishna from Bhagvad Gita) who will lead India to freedom. "Ma" on the other hand is more likely to refer to "The Motherland" i.e. India, than King George V's mother- The Queen. In Amar Sonar Bangla, the national anthem of Bangladesh, Tagore has used the word "ma" and "mata" numerous times to refer to the motherland. In his deeply mystic book "Gitanjali" (an offering of songs to the God) Tagore has used the same metaphor of God as "King":-

Poem #50:[4] "I had gone a-begging from door to door in the village path when thy golden chariot appeared in the distance like a gorgeous dream and i wondered who was this King of all Kings!"
Poem #51:[5] "The King has come- but where are lights, where are wreaths? Where is the throne to seat him?..... Open the doors, let the conch-shells be sounded!"
Poem #35:[6] "Where the mind is without fear and the head is held high...Into that heaven of freedom, my Father, let my country awake."

The following phrases ignored by the proponents of the King George V controversy strengthen credibility of Jana Gana Mana's patriotic message:-

Stanza 1:"Jana gana mangaldayako" The saving of all people waits in thy hand. Saving from what? Obviously British imperialism.
Stanza 2: The call of the Lord (not the King or Queen)is announced in every Indian home continuously in their prayers. He brings "Oikyo" i.e. unity of the people to gain freedom.
Stanza 3: "Jugo Dhabito Jaatri"(Pilgrims of the ages)are those who follow the path leading to god, not to some King or Queen of British Empire. Similarly "Biplabo" i.e. fierce revolution is our freedom struggle and "Shankhodhwoni"(conch-shell sound) in mythology announced the start of a "battle", here- nationalist struggle against the Empire. This is a path of sacrifice and only God can protect from fear and misery (Sankato Dukho).
Stanza 4: Through nightmares and fears, our mother i.e. motherland protected us in her lap, not the Queen.
Stanza 5"Nidrito Bharato Jaagey" (Sleeping India awakens). This phrase has been used at least once by every nationalist poet to awaken the masses for revolution against British Imperialism. The "Supreme King" makes a mockery of King George V in the sense that the protector of India is a king above all mortal kings.

3. Regional Aspects:-
Another controversy is that only those provinces that were under British rule, i.e. Punjab, Sindh, Gujarat, Maratha etc. were mentioned. None of the princely states were recognized which are integral parts of India now - Kashmir, Rajasthan, Andhra, Mysore or Kerala. Neither the Indian Ocean nor the Arabian Sea was included, since they were directly under Portuguese rule at that time. But opponents of this proposition claim that Tagore mentioned only the borders states of India to include complete India. Whether the princely states would form a part of a liberated Indian republic was a matter of debate even till Indian Independence. 'Dravida' includes the people from the south and 'Jolodhi' (Stanza 1) is Sanskrit for "seas and oceans". Even North-East which was under British rule or holy rivers apart from Ganges and Yamuna are not mentioned to keep the song in its rhythm. India has 28 states, 7 union territories.

In 2005, there were calls to delete the word "Sindh" and substitute it with the word Kashmir. The argument was that Sindh was no longer a part of India, having become part of Pakistan as a result of the Partition of 1947. Opponents of this proposal hold that the word "Sindh" refers to the Indus and to Sindhi culture, and that Sindhi people are an integral part of India's cultural fabric. The Supreme Court of India declined to change the national anthem and the wording remains unchanged.

Wednesday, April 20, 2011

JUDGE

Once upon a time there was a painter who had just completed his course. He took 3 days and painted beautiful scenery. He wanted people's opinion about his caliber and painting skills.

He put his creation at a busy street-crossing. And just down below aboard which read -"I have painted this piece. Since I'm new to this profession I might have committed some mistakes in my strokes etc. Please put a cross wherever you see a mistake."

While he came back in the evening to collect his painting he was completely shattered to see that whole canvass was filled with Xs(crosses) and some people had even written their comments on the painting.

Disheartened and broken completely he ran to his master's place and burst into tears.
This young artist was breathing heavily and master heard him saying "I'm useless and if this is what I have learnt to paint I'm not worth becoming a painter. People have rejected me completely. I feel like dying"

Master smiled and suggested "My Son, I will prove that you are a great artist and have learnt a flawless painting. Do as I say without questioning it. It WILL work."

Young artist reluctantly agreed and two days later early morning he presented a replica of his earlier painting to his master. Master took that gracefully and smiled.


"Come with me." master said.

They reached the same street-square early morning and displayed the same painting exactly at the same place. Now master took out another board which read -"Gentlemen, I have painted this piece. Since I'm new to this profession I might have committed some mistakes in my strokes etc. I have put a box with colors and brushes just below. Please do a favor. If you see a mistake, kindly pick up the brush and correct it."

Master and disciple walked back home.

They both visited the place same evening. Young painter was surprised to see that actually there was not a single correction done so far. Next day again they visited and found painting remained untouched. They say the painting was kept there for a month for no correction came in!


Moral of the story:

It is easier to criticize, but DIFFICULT TO IMPROVE
!

So don't get carried away or judge yourself by someone else criticism and feel depressed...

JUDGE YOURSELF! YOU ARE YOUR BEST JUDGE!!!

நன்றி: மதிமலர்

செய்வீர்களா?வருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல்.

ஐயா, அம்மணி, உங்களில் யாரோ முதல்வராக வரப்போகிறீர்கள். உங்களுக்கும் இப்போது அது சஸ்பென்ஸ். உங்கள் உறக்கத்தைக் கெடுத்துள்ள ஓட்டுப் பெட்டிகள் உறக்கத்தில் இருக்கின்றன. அவை எழுந்ததும், நீங்கள் யார் என்பது எங்களுக்கு தெரிந்துவிடும். மக்கள் எஜமானர்கள், நீங்கள் வேலைக்காரர்கள் என்கிறீர்களே... அது உண்மை, எங்கள் காதில் சுற்றிய பூ இல்லை என்பதை நம்பி, நாங்கள் எழுதும் திறந்த மடல் இது.


உங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கட்டும், எங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா, அதற்காகவே இந்த கடிதம்.நீங்கள் பதவியேற்கும் முன்பே ஆரவாரம் தொடங்கும்; ஆடம்பரம் தொடரும். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஐயாவே, அம்மணியே, நீங்கள் இப்போதே உங்கள் தொண்டர் படைக்குச் சொல்லி வைத்துவிட்டால், ஆரவாரமில்லாமல், உங்கள் வெற்றியை கொண்டாடலாம். அமைதிக்கு கவுரவம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை மட்டும் குறை சொல்லக்கூடாது... நாங்களே வெறும் கைதட்டிக் கூட்டம்... காக்காய் பிடிக்கும் கும்பல். புண்ணாக்கு சங்கம், பருத்திக்கொட்டை சங்கம், குதிரைக் குஞ்சு சங்கம், கோழிக்குட்டி சங்கம் என்று பல சங்கங்கள் வைத்திருக்கிறோம். இதுதான் எங்கள் சங்க காலம். ஒவ்வொரு சங்கமும் பத்திரிகைகளில், "போற்றி, போற்றி' என்று போட்டி போட்டு உங்களை புகழ்ந்து விளம்பரங்கள் வெளியிடும்.அப்படி செய்யாதீர்கள் என்று நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகளை வேண்டிக்கொள்வீர்களா? நீங்கள் தீர்மானித்து விட்டால், இந்த விளம்பரங்கள் வராது. இப்படிப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு நானும் உங்களைப் போல் கலப்பைக்காரன், கரண்டிக்காரி, சட்டிக்காரன், முட்டைக்காரி என்று சொல்வதைத் தவிர்ப்பீர்களா?


நீங்கள் இந்த மாதிரி சில குழுக்களுக்காக மட்டுமல்ல, எல்லாருக்குமே முதல்வர் என்பதை முழுமையாக புரிந்து கொள்வீர்களா? உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நீங்களே முதல்வர்; சரிதானே.இந்த புதிய ஆட்சிக் காலத்தில் நீங்களோ, உங்கள் அமைச்சர் பெருமகன்களோ, பெருமாட்டிகளோ செல்லும் வழி நெடுக, கட்-அவுட்கள், படத்தட்டிகள், கொடிகள் வைப்பதைத் தடுப்பீர்களா? எந்த ஆரவாரமும் எவருக்கும் கவுரவம் சேர்ப்பதில்லை என்பதை கட்சித் தலைவர், கட்சித் தலைவி என்ற முறையில் புரிந்து கொள்வீர்களா?அரசுத் திட்டங்களின் அறிமுகமா? புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? பாலமோ, கழிப்பறையோ திறப்பதா? அங்கெல்லாம் முதல்வர் தன் பரிவாரத்துடன் சென்று விழா நடத்தும் சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? விழாக்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் வேறு வழிகளிலும் கிடைக்கும்; அதை நாடுங்களேன்.மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர இருக்கும் நேரத்தில், உங்கள் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி எதுவும் சொல்லாமல், இருக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமே. அவர்கள் என்றென்றும் கையேந்திகளாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சுயமரியாதைக் கொள்கைக்கு அது பொருத்தமாக இல்லையே. அதை உடனடியாக செய்துவிட முடியாது. ஆனால், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டால், உருப்படியான திட்டங்களுக்கு பணம் செலவிடப்படலாம். இனி, இலவசங்கள் தேவைப்படாது என்ற நிலை உருவாக்கப் பாடுபடுவீர்களா?மக்களுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் தரும்போது, இதை முதலமைச்சராக உள்ள நான் தரவில்லை. அரசாங்கம் மூலம் இதை நீங்கள் இவற்றைப் பெறுவதற்குக் காரணம், வரி செலுத்தும் உங்கள் சகோதரர்களே என்ற உண்மையை பகிரங்கமாக சொல்லி, உங்கள் சுயமோகத்தை விரட்டிவிட்டு சகோதரத்துவத்தை வளர்ப்பீர்களா?கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திவிட்டு, கோட்டை பக்கம் வரவிடாமல் தடுப்பீர்களா?


கோட்டையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் பொது நலன்களுக்காக அல்லாத உரிய வேலைகளுக்காக வரும் மக்களே தென்பட வேண்டும், கரை வேட்டிகள் அல்ல. இதற்கான கறாரான ஏற்பாடுகளை செய்வீர்களா?காவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் இருப்பீர்களா?உங்கள் பி.ஏ.,க்கள், அமைச்சர்களின் பி.ஏ.,க் கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சமஸ்தானமாக மாறிவிடாமல் இருக்க, அவர்களைக் கண்காணிப்பீர்களா? நீங்கள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் அல்லவா?அறைக்கு வெளியே இரு பக்கங்களிலும் பெரிய, மிகப்பெரிய "டிவி' அளவுக்கு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பொருத்தி, ஒன்றில் உங்களை அறையில் சந்திக்க வருகிறவர்கள் யார் என்ற தகவலையும், மறு திரையில் உங்கள் வசம் முடிவுக்காக காத்திருக்கும் கோப்புகள் எவை என்பதையும் தெரிவிப்பீர்களா? அதுதானே ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம். செய்வீர்களா?உங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா?அலுவலகத்தில் இருக்கும்போது, அலுவலக வேலையை மட்டுமே பாருங்கள்; வீட்டில் நீங்கள் குடிமக்கள் என்ற தினசரி நடைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள்; அதை அப்படியே செய்துவிட முடியாது. மாநிலத்தில் எங்காவது நெருக்கடி என்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எங்களது, 24 மணி நேர ஊழியர். அப்படி ஊழியம் செய்ய கூப்பிட்ட குரலுக்கு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும். அவர்கள் வரட்டும், அருகில் இருக்கட்டும். மற்றபடி கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே... செய்வீர்களா?


ஆட்சியிலும், கட்சியிலும் ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் அறவே ஒழிப்பீர்களா? பதவியேற்று மூன்று அல்லது ஆறு மாதம் கடந்த பிறகு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாருங்கள். அங்கே அரசு சட்ட திட்டங்கள்படி நடைபெறுகிறதா, கட்-அவுட்களின்படி நடந்து வருகிறதா என்று பார்த்து வாருங்கள். அந்த ஒழுங்கு முறையை சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் கொண்டு வாருங்கள். அதுதான் முன்னேற்றத்தின் முதல்படி. உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் வேறு காரணங்களுக்காக அமைய வேண்டாம். கமிஷன் என்றால், கமிஷனும் வரும். புரிகிறதா? மக்களுக்கு இப்போது அதிக விவரம் தெரிந்து விட்டது.வீட்டில் இல்லாத ஒழுக்கம் வீதியில் வராது. வீதியில் இல்லாத ஒழுக்கம் சமூகத்தில் வராது. சமூகத்தில் இல்லாத ஒழுக்கம் அரசாங்கத்தில் வராது. இப்போது சீர்திருத்தத்தை உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். வருங்கால முதல்வரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி... மக்கள் இனி புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கலாமா? எங்களால் ஏற முடியவில்லை; முடங்கிப் போய்விட்டோம். நீங்கள் இறங்கி வருவீர்களா, எங்களை ஏற்றிவிட?


ஆர்.நடராஜன், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.